பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(13-03-2024) மாலை திறக்கப்பட்டது.
மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி கோயில் நடையை திறந்து வைத்து தீபம் ஏற்றினார். அதனைத் தொடர்ந்து 14ஆம் தேதி காலை கணபதி ஹோமம் உள்ளிட்ட வழக்கமான பூஜைகளுக்கு பிறகு கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெறும். காலை 9 மணிக்கு பூஜையில் வைத்து வழிபட்ட கொடி, மேளதாளத்துடன் சன்னிதியை வலம் வருகிறது. அதன் பிறகு நெற்றிபட்டம் கட்டிய யானை கொடி மரத்தின் அருகே வந்தவுடன் தந்திரி கண்டரு மகேஷ் மோகனரு கொடிமரத்துக்கு பூஜைகள் செய்கிறார். அதனைத் தொடர்ந்து காலை 9:45 மணி அளவில் கொடியேற்றப்படுகிறது. இந்த பங்குனி உத்திர திருவிழா கொடி ஏற்றத்துடன் 10 நாட்கள் நடைபெறும்.25ம் தேதி ஐயப்பசாமி யானை மீது எழுந்தருளி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறுகிறது. அன்று இரவு 10 மணி அளவில் நடை சாத்தப்படுகிறது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.