Rock Fort Times
Online News

தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் உள்ள அவரது சிலைக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை…!

தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு  திமுக முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி, மத்திய மாவட்ட திமுக செயலாளர்  வைரமணி தலைமையில், மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான  மு.அன்பழகன் முன்னிலையில் திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இதனைத்தொடர்ந்து திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் உள்ள பேரறிஞர் அண்ணா மற்றும் முத்தமிழ் அறிஞர் கருணாநிதி திருஉருவ சிலைகளுக்கு திமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.  இந்த நிகழ்வில் சேர்மன் துரைராஜ், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அன்பில் பெரியசாமி, நிர்வாகிகள் விஜயலட்சுமி கண்ணன், செவந்தி லிங்கம், பாலமுருகன்,  இளங்கோ, மோகன்தாஸ், ராம்குமார், கனகராஜ், லால்குடி நகர தலைவர் துரை, கலைச்செல்வி, வழக்கறிஞர் மணிவண்ண பாரதி, மோகன், வெங்கடேசன், மதனா, சிங்காரம், கவிதா, முகுந்தன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்