Rock Fort Times
Online News

திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பாக மொழிப்போர் தியாகிகள் நினைவிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மலர்வளையம் வைத்து மரியாதை…!

மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாளை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில் மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி தலைமையில் திமுகவினர் தென்னூர் உழவர் சந்தை பாலம் அருகில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு தியாகிகள் சின்னசாமி, மனோகர், விராலிமலை சண்முகம் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வில் கிழக்கு மாநகர கழகச் செயலாளரும், மண்டல குழு தலைவருமான மு.மதிவாணன், மாநகராட்சி துணை மேயர் திவ்யா தனக்கோடி, திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன்,
கே.என்.சேகரன், சபியுல்லா மற்றும் மாவட்ட, மாநகர பகுதி கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்