Rock Fort Times
Online News

யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள்… முகவர்கள் கூட்டத்தில் முதல்வர் மு.க .ஸ்டாலின் பேச்சு

திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று(24-9-2023) நடந்தது. கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தலில் தொடக்க புள்ளியாக முகவர்கள் கூட்டத்தை தொடர்ந்து நடத்தி வருகிறோம். ஏற்கனவே திருச்சி, ராமநாதபுரத்தில் முகவர்கள் கூட்டத்தை நடத்தி முடித்து உள்ளோம். மூன்றாவதாக இன்று காங்கயத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். பெரியாரும், அண்ணாவும் முதன் முதலில் சந்தித்த ஊர் தான் திருப்பூர். இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது பள்ளி மாணவர்கள் அதிக பங்கேற்ற ஊர் திருப்பூர். நாடாளுமன்ற தேர்தலை எதிர்நோக்கி காத்திருக்கிறோம். தி.மு.க. அரசின் சாதனைகளை வாக்காளர்களிடம் தொடர்ந்து எடுத்துக் கூற வேண்டும். வாக்குச்சாவடி முகவர்கள் மீது நம்பிக்கை வைத்தே தேர்தலில் 40க்கு 40 வெற்றியென கூறி வருகிறேன். தமிழகத்தில் மக்களாட்சி நடைபெற்று வருகிறது. மத்தியில் இரண்டாவது முறையாக ஆட்சி செய்யும் பா.ஜ.க. மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வராது. இதுவரை கொடுத்த வாக்குறுதிகளில் எதையாவது மத்திய பா.ஜ.க.அரசு நிறைவேற்றி இருக்கிறதா?. சேலம் உருக்காலையை நவீனப்படுத்துவோம் என்ற வாக்குறுதியைக் கூட மத்திய அரசு நிறைவேற்றவில்லை. பாஜக கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் பத்திரமாக ஆவணங்களாக உள்ளது. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் அளிக்கும் மக்கள் கோரிக்கைகளை அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் நிறைவேற்ற வேண்டும். கவலையின்றி மக்களை சந்தியுங்கள். யாரும் நம்மை நிராகரிக்க மாட்டார்கள். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்