மருத்துவ படிப்பில் சேர “நீட்” என்கிற நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த ஆண்டுக்கான நுழைவு தேர்வு மே 4-ம் தேதி நடக்கிறது. மதியம் 2 மணிக்கு தொடங்கும் தேர்வு மாலை 5 மணிக்கு முடிவடைகிறது. இதில் நாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான மாணவ, மாணவிகள் தேர்வு எழுத உள்ளனர். இதனிடையே, கடந்த ஆண்டு (2024) நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிந்தது. இந்த விவகாரம் பெரும் பூதாகாரமான நிலையில் பலர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் நடப்பு ஆண்டு நீட் தேர்வின்போது வினாத்தாள் கசிவு, மோசடி தொடர்பான புகார்களை தெரிவிக்க தேசிய தேர்வு முகமை புதிய இணையதள பக்கத்தை தொடங்கியுள்ளது. NEET.NTA.AC.IN A NTA.AC.IN இணைய தளங்களின் வழியாக புகாரளிக்கலாம். புகார்களை ஆதாரத்துடன் இதில் பதிவு செய்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். ஆசை காட்டி மோசடியில் ஈடுபடுவோரை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் தேசிய தேர்வு முகமை கேட்டுக் கொண்டுள்ளது.
Comments are closed.