.
.திருச்சி மாவட்டம், லால்குடி அருகே சிறுமயங்குடியில் செயல்பட்டு வரும் அரசு தொடக்கப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு
இன்று(21-12-2023) காலை உணவு வழங்கப்பட்டது. 49 மாணவ மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியை என 50 பேர் உணவு சாப்பிட்டனர். அவர்களில் ஒரு மாணவனுக்கு வயிற்று வலி ஏற்பட்டு வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து 19 மாணவ மாணவிகளுக்கும் வயிற்று வலி ஏற்பட்டதாக பள்ளி ஆசிரியரிடம் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அவர்கள் லால்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த லால்குடி சட்டமன்ற உறுப்பினர் சௌந்தரபாண்டியன் மருத்துவமனைக்கு சென்று மாணவ மாணவிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், குழந்தைகள் நல மருத்துவ குழுவினர் விரைந்து வந்து மாணவ மாணவிகளுக்கு வழங்கப்பட்ட உணவின் தரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலை உணவு சாப்பிட்ட மாணவ- மாணவிகளுக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.