திருச்சியில் முன்னாள் அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை..!
திமுகவின் மூத்த நிர்வாகி, முன்னாள் அமைச்சர், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தின் செயலாளர் என பல பதவிகளை வகித்த மறைந்த புரவலர் அன்பில் தர்மலிங்கத்தின் 106- ம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு, திருச்சி கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள அன்பில் தர்மலிங்கம் சிலைக்கு பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வில் கிழக்கு மாநகர செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கே.என்.சேகரன், பி.எம் சபியுல்லா, மலைக்கோட்டை பகுதி கழகச் செயலாளர் ஆர்.மோகன் மற்றும் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள், மாநில, மாவட்ட, மாநகர, பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
Comments are closed.