தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் 8 வது பொறுப்பாளராக தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
Comments are closed.