Rock Fort Times
Online News

3 மாவட்டங்களுக்கு திமுக பொறுப்பாளராக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு ஆண்டு உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் இப்போதே தேர்தல் பணிகளை தொடங்கி விட்டன. சட்டமன்ற தேர்தல் பணிகளுக்காக ஏற்கனவே திமுகவில் 7 மண்டல பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் 8 வது பொறுப்பாளராக தற்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் கடலூர் கிழக்கு, விழுப்புரம், காஞ்சிபுரம் தெற்கு மாவட்டங்களுக்கு பொறுப்பாளராக செயல்படுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்