பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் கே.என்.நேருவின் மகன் அருண் நேரு போட்டியிடுகிறார். அவருக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (27-03-2024) கரூர் மாவட்டம் குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தோகைமலை கொசூரில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது அமைச்சர் கே.என்.நேருவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
இதன் காரணமாக பிரச்சாரத்தை நிறுத்திய அவர், எனக்கு மயக்கமாக இருக்கிறது இருந்தாலும் ஒரு சில வார்த்தைகளை பேசுகிறேன் என்றார். அப்போது அவர், எனது துறையின் கீழ் வரும் குடிநீர் வாரிய பிரச்சினைகளை இப்பகுதியில் கண்டிப்பாக தீர்த்து வைப்பேன்” எனத் தெரிவித்து விட்டு பிரச்சார வாகனத்திலிருந்து கீழே இறங்கி காரில் ஏறி மருத்துவமனைக்குச் சென்றார். அமைச்சர் கே என்.நேருக்கு பிரசாரத்தின் போது திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டதால் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.