தஞ்சை மாவட்டம், அம்மாபேட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ் (வயது 46) என்பவர் கொலை வழக்கு ஒன்றில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இந்தநிலையில் சிறையில் இருந்த அவருக்கு திடீரென்று நெஞ்சு வலி மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். அவரை சிறை காவலர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். இதுகுறித்து சிறை அதிகாரி விக்னேஷ் கே.கே.நகர் போலீசில் கொடுத்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.