திருச்சி, பாப்பாக்குறிச்சி காட்டூர், மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து மனைவி கலைச்செல்வி (64). இவர் , திருவானைக்காவல் பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார். திருவானைக்காவல் பேருந்து நிறுத்தத்தில் அரசு பேருந்தில் ஏறி சத்திரம் பேருந்து நிலையத்தில் இறங்கியபோது, அவரது கைப்பையில் வைத்திருந்த 5 பவுன் சங்கிலி, அரை பவுன் மோதிரம், ரூ. 3000 ரொக்கம் உள்ளிட்டவைகளை மர்ம நபர்கள் திருடிவிட்டனர். இதுகுறித்த புகாரின் பேரில் கோட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.