Rock Fort Times
Online News

பாகிஸ்தான் தாக்குதலில் உயிரிழந்த அரசு அதிகாரி- ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா இரங்கல்…!

ரஜோரி மற்றும் ஜம்மு காஷ்மீரில் உள்ள பிற இடங்களை இன்று(10-05-2025) அதிகாலை பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ளது. குறிப்பாக பொதுமக்கள் அதிகம் உள்ள இடங்களை குறி வைத்து பாகிஸ்தான் தாக்குதல் நடத்தி இருக்கிறது. இந்த தாக்குதலில் துரதிஷ்டவசமாக ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்த அரசு அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளார். இது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளித்துள்ளதாக ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா தெரிவித்துள்ளார். இவர் உயிரிழப்பதற்கு சிறிது நேரத்துக்கு முன்பு ஆன்லைன் கலந்துரையாடல்களில் என்னுடன் பேசினார் என்றும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் நிர்வாக சேவைகளின் அர்ப்பணிப்புள்ள அதிகாரியை நாங்கள் இழந்து விட்டோம். நேற்று தான் அவர், துணை முதல்வருடன் இருந்தார். நான் தலைமை தாங்கிய ஆன்லைன் கூட்டத்தில் கலந்து கொண்டார். இன்று அந்த அதிகாரியின் வீடு பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் ரஜௌரி நகரத்தை குறிவைத்து தாக்கப்பட்டது. எங்கள் கூடுதல் மாவட்ட மேம்பாட்டு ஆணையர் எஸ்.ராஜ் குமார் தாப்பா கொல்லப்பட்டார். இந்த உயிரிழப்பு குறித்து வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்