Rock Fort Times
Online News

நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி வீடு, வீடாகச் சென்று முதியவர்களுக்கு அழைப்பிதழ்…!

திருச்சி கலெக்டர் வழங்கினார்

நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீத வாக்களிப்பதை வலியுறுத்தி திருச்சி நீதிமன்ற ரவுண்டானா அருகில் பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது.

இதனை மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட தேர்தல் அலுவலர் மா. பிரதீப்குமார் கொடியசைத்து தொடங்கி
வைத்தார். இதனை தொடர்ந்து 2024 பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி திருச்சி கீழசிந்தாமணி பகுதியில் 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் தேர்தலில் வாக்களிக்க வலியுறுத்தி அவர்களின் இல்லங்களுக்கே சென்று அழைப்பிதழ்களை வழங்கினார். இறுதியாக திருச்சி சேவா சங்கம் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்காக பிரத்தியேகமாக அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்