Rock Fort Times
Online News

திருச்சியில் தொடக்க கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…

தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியா்  அலுவலகம் அருகே இன்று ( 09.10.2023 ) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில தலைவர் மதிவண்ணன் தலைமை தாங்கினார், மாநில துணை செயலாளர் துரை கண்ணு முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க கூட்டுறவு கடன் சங்க பணியாளர்களின் ஊதிய ஒப்பந்தம் குறித்து அமைக்கப்பட்ட கமிட்டி அறிக்கையினை விரைவில் பெற்று ஊதிய உயர்வு உடனடியாக அறிவிக்கப்பட வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். சங்கங்களில் தவணை தவறிய நகைகளை ஏலம் விட்ட வகையில் ஏற்பட்ட இழப்பீட்டுத் தொகையினை நஷ்டக் கணக்கிற்கு கொண்டு செல்ல பதிவாளரால் வழங்கப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள நிபந்தனைகளை தளர்த்தி சங்கப் பணியாளர் நலன் கருதி சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மேலும் மேற்கண்ட கோரிக்கைகள் நிறைவேற்ற தவறினால் வருகிற 12ந்தேதி மாவட்ட தலைநகரங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடத்தப்படும் என போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதில் திருச்சி, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக திருச்சி மாவட்டச் செயலாளர் காமராஜ் வரவேற்றார். முடிவில் மாவட்ட தலைவர் ஜெகநாதர் நன்றி கூறினார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்