Rock Fort Times
Online News

திருச்சி உறையூரில் போதையால் பாதை மறந்த இளைஞர் பக்கத்து வீட்டுக்குள் நுழைந்ததால் சரமாரி அடி…

திருச்சி உறையூர் பசுமடம் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ராஜாராம் வயது 35. இவர் குடிபோதையில் இவரது வீட்டுக்கு செல்வதற்கு பதில் பக்கத்து வீட்டைச் சேர்ந்த அண்ணாதுரை என்பவரது வீட்டுக்குள் நுழைந்துள்ளார். இதையடுத்து ராஜாராமுக்கும் அண்ணாதுரைக்கும் தகராறு ஏற்பட்டது. அண்ணாதுரை மற்றும் அதே பகுதியை சேர்ந்த சிலர் சேர்ந்து ராஜாராமை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ராஜாராமின் மனைவி சத்யா, உறையூர் போலீஸில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்