திருச்சி நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு இலவச பயிற்சி…
நீதிபதிகள் ஜெயக்குமார், மீனா சந்திரா தொடங்கி வைத்தனர்...
திருச்சி மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், உயர் நீதிமன்றம் அறிவுறுத்தலின்படி வாதுரைச்சட்டம் என்ற தலைப்பில் வழக்கறிஞர்களுக்கான இலவச பயிற்சி தொடங்கப்பட்டது. இதனை இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் மற்றும் தலைமை குற்றவியல் நீதிபதி மீனா சந்திரா ஆகியோர் தொடங்கி வைத்தனர். குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் செயலாளர் பி.வி.வெங்கட் வரவேற்றார். இந்நிகழ்வில் சுகுணா சட்ட அகாடமி சுரேஷ், உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ரமேஷ், குற்றவியல் வழக்கறிஞர் சங்கத்தின் நிர்வாகிகள் சசிகுமார், விஜயநாகராஜன் மற்றும் 200-க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.