மலேசியாவில் இருந்து தனியார் விமானம் ஒன்று திருச்சி விமான நிலையத்தை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகளை விமான நிலைய அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது மதுரை மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த 2 பயணிகள் 3 அட்டை பெட்டிகளில் அடைத்து வெளிநாட்டு ஆமைக்குஞ்சுகளை கடத்தி வந்தது கண்டறியப்பட்டது. அதனை பறிமுதல் செய்த அதிகாரிகள், இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் விமான நிலையத்திற்கு வந்த வனத்துறையினர் ஆமைகளை பார்வையிட்டனர். அப்போது 3 அட்டை பெட்டிகளில் 6000-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு ஆமைக்குஞ்சுகள் இருந்தன. அதனை மீண்டும் மலேசியாவிற்கு அனுப்பும் முயற்சியில் விமான நிலைய அதிகாரிகளும், வனத்துறையினரும் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் அதனை கடத்தி வந்த 2 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

Comments are closed, but trackbacks and pingbacks are open.