கிருஷ்ணகிரி மாவட்டம் பழையபேட்டையில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு குடோனில் இன்று ( 29.07.2023) பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இதில், இதுவரை 5 பேர் உயிர் இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பட்டாசு வெடி விபத்தில் குடோனுக்கு அருகே உள்ள 3க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து தரைமட்டமாகின. இந்த வெடி விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், இறந்தவர்களின் உடல்களை மீட்டு , பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.