Rock Fort Times
Online News

கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் தலைமை காவலர் தற்கொலை…!

கடலூர் மாவட்டம் கோண்டூரை சேர்ந்தவர் நந்தகோபால கிருஷ்ணன். இவரது மனைவி சத்தியகலா(38). கடலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வந்தார். நந்தகோபாலகிருஷ்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு 6 வயதில் மகன் உள்ளார். குழந்தையை பார்த்துக்கொள்வது தொடர்பாக மாமியார், மருமகள் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.கணவர் வெளிநாட்டிற்கு சென்று விட்டதாலும், மாமியாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாகவும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகேயுள்ள காட்டகரம் கீழத்தெருவில் உள்ள தனது தந்தை வீட்டில் சத்தியகலா மகனுடன் வசித்து வந்தார். மகனை பொறுப்பாக பார்த்துக்கொள்ள முடியவில்லையே என சத்தியகலா மன உளைச்சலில் இருந்தாராம்.  இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயற்சி செய்த சத்தியகலாவை உறவினர்கள் மீட்டு அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து மீன்சுருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து‌விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்