Rock Fort Times
Online News

போலி பத்திரம்மூலம் ரூ.7 கோடி நிலம் அபகரிப்பு…! கலெக்டரிடம் பொதுமக்கள் மனு…

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் தலைமையில் நடந்தது .கூட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை அளித்தனர். அப்போது திருச்சி புங்கனூர் பகுதி கிராம மக்கள் கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

திருச்சி ஸ்ரீரங்கம் தாலுகா, தாயனூர் கிராமத்தில் உள்ள ரூ.3 கோடி சொத்தினை திமுக பஞ்சாயத்து தலைவா் ஆள்மாறாட்டம் செய்து போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளாா். இது தொடர்பாக நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், ராணுவ வீரர்களுக்கு அரசாங்கத்தால் வழங்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தையும் போலி பத்திரம் மூலம் அபகரித்துள்ளாா். மேற்கண்ட இரு சொத்துகளின் மதிப்பு சுமார் ரூ.7 கோடி இருக்கும். ஆகவே, தகுந்த நடவடிக்கை எடுத்து எங்கள் ஊரில் நிலவும் அசாதாரணமான சூழலை சரி செய்ய நல்லதொரு அதிகாரியை நியமிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்