Rock Fort Times
Online News

சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது தொடர்பாக தகராறு: கல்லூரி மாணவரை தாக்கிய ரவுடி கைது…!

திருச்சி, உய்யகொண்டான் திருமலை செல்வா நகர் 2வது கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மகன் சாய் செந்தில் (19 ). இவர் தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் பி.டெக் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கும், இவருடைய நண்பர் அர்பான் என்பவருக்கும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடுவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை சமரசம் செய்வதற்காக காந்திபுரம் பகுதியிலுள்ள டீ கடைக்கு இருதரப்பினரும் வந்தனர். அப்போது அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில், சாய் செந்திலை எதிர் தரப்பினர் கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் பலத்த காயம் சாய் செந்தில் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து சாய் செந்தில் அளித்த புகாரின்பேரில் உறையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமராஜன் வழக்கு பதிந்து தென்னூர் வாமடம் சப்பானி கோவில் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்ற ரவுடியை கைது செய்தார். மேலும் பரத், கார்த்திக் இருவர் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்