தி.மு.க. முதன்மை செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு வழிகாட்டுதலின்படி திருச்சி மத்திய மாவட்ட மற்றும் வடக்கு மாவட்ட திமுக மகளிர் அணி, மகளிர் தொண்டர் அணி சார்பில், மணிப்பூரில் பெண்களுக்கு நடந்த வன்கொடுமை குறித்து நடவடிக்கை எடுக்காத பா.ஜ.க. அரசை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்சன்,காதிகிராப்ட் அருகே மாவட்ட துணைச் செயலாளர் விஜயா ஜெயராஜ் தலைமையில் இன்று ( 24.07.2023 )ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான அன்பழகன், மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி, ஆண்டாள் ராம்குமார் மற்றும் தி.மு.க.கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் 500க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்டு மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.