புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி இரண்டாவது தெரு அக்ரகாரத்தைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். (வயது 58). இவர் தமிழ்நாடு அரசு மின்வாரியத்தில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவர் மனைவி, மகளுடன் நகை எடுப்பதற்காக திருச்சி கடை வீதிக்கு வந்திருந்தார். அங்குள்ள ஒரு நகைக்கடையில் நகை வாங்கிவிட்டு திருச்சி அரியமங்கலம் பால்பண்ணை பஸ் நிறுத்தத்திற்கு வந்து தஞ்சாவூர் பஸ் ஏறுவதற்காக 3 பேரும் நின்று கொண்டிருந்தனர். அப்போது அவரது கைப்பையை பார்த்தபோது செயின், ஆரம் உள்பட 9 பவுன் நகைகளை காணவில்லை. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து அரியமங்கலம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில், இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப்பதிந்து கடைவீதியில் அவர் நகையை பறி கொடுத்தாரா? அல்லது பால்பண்ணையில் நின்றபோது நகை திருட்டுப் போனதா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Comments are closed.