சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவல் முடிவடைந்ததைத் தொடர்ந்து வீடியோ கான்பரன்சிங் முறையில் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று ( 29.09.2023 ) ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது செந்தில்பாலாஜியின் நீதிமன்ற காவலை மேலும் 14 நாட்கள் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். வரும் அக்டோபர் 13 வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு 7-வது முறையாக நீதிமன்ற காவல் நீடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.