திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் தாய்சேய் நலனை மேம்படுத்தும் வகையில் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்து கொண்டு. கர்ப்பிணி பெண்களுக்கு வளையல், மங்கலநாண், மஞ்சள். குங்குமம், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், வேப்பம் காப்பு, மாலை உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை வழங்கி வாழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் எஸ்.ஸ்டாலின் குமார், மாவட்ட வருவாய் அலுவலர் எம்.ராஜலட்சுமி. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கங்காதாரிணி, மாவட்ட திட்ட அலுவலர் நித்யா, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் காஞ்சனா, மண்டலத் தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பொது மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.