தமிழ்நாட்டில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27-01-2024) ஸ்பெயின் பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஸ்பெயினில், முதல்வர் முன்னிலையில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட உள்ளதாக தெரிகிறது.
சமீபத்தில் சென்னையில் நடந்த முதலீட்டாளர்கள் மாநாட்டில் சுமார் ரூ.6 லட்சம் கோடிக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், மேலும் வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்லவுள்ளார். இன்று இரவு 8.45 மணிக்கு சென்னை விமான நிலையத்திலிருந்து துபாய் செல்லும் முதல்வர், அங்கிருந்து ஸ்வீடன் சென்று அதன் பின்னர் ஸ்பெயின் செல்லவுள்ளார். அங்கு பல்வேறு நாட்டு தொழிலதிபர்களையும், அரசு பிரதிநிதிகளையும் சந்தித்து பேசுகிறார். முதல்வரின் இந்த 10 நாள் பயணத்தில் ஸ்பெயின் மட்டுமல்லாது இங்கிலாந்து, ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கும் முதல்வர் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. தனது வெளிநாட்டு பயணத்தை முடித்துக் கொண்டு பிப்ரவரி 7ம் தேதி மீண்டும் சென்னை திரும்புகிறார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.