குறுவை சாகுபடி பணிகளுக்காக மேட்டூரில் இருந்து 12-ம் தேதி தண்ணீர் திறப்பு ….
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்..
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகிற 11,12 -ம் தேதிகளில் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 11-ம் தேதி, பயனாளிகளுக்கு அரசின் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். 12-ம் தேதி, காவிரி டெல்டா குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து வைக்க உள்ளார். விழா முன்னேற்பாடு பணிகளை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு இன்று (05.06.2023) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அவருடன் சேலம் மாவட்ட ஆட்சித்தலைவர் செ.கார்மேகம், மாநகராட்சி மேயர் ஆ.இராமச்சந்திரன், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் இரா.இராஜேந்திரன், மாநகர காவல் ஆணையாளர் பி.விஜயகுமாரி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) சீ.பாலச்சந்தர் உட்பட தொடர்புடைய அலுவலர்கள் உடன் இருந்தனா்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.