Rock Fort Times
Online News

தமிழகத்திற்கு வினாடிக்கு 9,000 கன அடி நீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை..!

தமிழகத்தின் டெல்டா பாசனப் பகுதிகளின் நீர் தேவையைத் தீர்க்கும் வகையில், காவிரி ஆற்றில் இருந்து வினாடிக்கு 9,000 கன அடி வீதம் தண்ணீரைத் திறந்து விடுமாறு காவிரி நீர் ஒழுங்காற்று குழு ம பரிந்துரைத்துள்ளது. காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 141-வது ஆலோசனைக் கூட்டம் காணொளி வாயிலாக இன்று(24-08-2026) நடைபெற்றது. இந்த கூட்டத்தின் முடிவில், தமிழகத்தின் கோரிக்கையைக் கணக்கில் கொண்டு, தமிழ்நாட்டுக்குக் காவிரியில் இருந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை வாரியத்திற்கு ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, அடுத்த 15 நாட்களுக்குத் தொடர்ந்து வினாடிக்கு 9 ஆயிரம் கன அடி தண்ணீரைத் திறந்து விட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் நீர் இருப்பு மற்றும் தமிழகத்தின் விவசாயத் தேவைகளை ஆராய்ந்து எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு, தமிழக விவசாயிகளிடையே நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்