திருச்சி மண்ணச்சநல்லூர் அருகே உள்ள பிச்சாண்டார் கோவில் ஊராட்சியில் உத்தமர் கோவில் பழனியப்பா நகரை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மகன் 44 வயதான அர்ஜுனன். இவர் பழனியப்பா நகரில் கடந்த 5 வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருகிறார். கடந்த 7 ம் தேதி தலைமலையில் உள்ள பெருமாள் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்றுவிட்டு நேற்று இரவு வீட்டிற்கு திரும்பி வந்த போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த ரூ.90,000 பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தொியவந்தது. இது குறித்து கொள்ளிடம் காவல் நிலையத்தில் அர்ஜுனன் கொடுத்த புகாாின் பேரில் கொள்ளிடம் போலீசார் வழக்கு பதிவு செய்து பணத்தைச் திருடிச் சென்ற மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.
Comments are closed, but trackbacks and pingbacks are open.