Rock Fort Times
Online News

நாக்பூரில் வெடி விபத்து: 9 பேர் பலி…

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வெடி மருந்துகள் தயாரிக்கும் ஆலை ஒன்று உள்ளது. இந்த ஆலையில் இன்று(17-12-2023) வெடி விபத்து ஏற்பட்டது. இதில், இங்கு வேலை பார்த்துக் கொண்டிருந்த 9 பேர் உயிரிழந்ததாகவும், மேலும், பலர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த தகவலின்பேரில் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதுகுறித்து தீயணைப்பு நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில், வெடிவிபத்து நடந்த போது எத்தனை தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்பது தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று தெரிவித்தார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்