Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை குறித்து விழிப்புணர்வு…

திருச்சி மாவட்ட ஆட்சியா்  மா.பிரதீப் குமார் ஐஏஎஸ் அறிவுரையின் படியும், தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருச்சி சார்பாகவும், ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் வளாகத்தில் ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறிய கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பக்தர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடந்தது. கோவில் இணை ஆணையர் செ. மாரிமுத்து , திருச்சி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியம் சுற்றுச்சூழல் பொறியாளர் சா.சிவரஞ்சனி ஆகியோர் பக்தர்களுக்கு மஞ்சள் துணிப்பை மற்றும் விழிப்புணர்வு துண்டு பிரசுரத்தை வழங்கினர். நிகழ்ச்சியில் திருச்சி மாவட்ட மாசுகட்டுபாடு வாரிய உதவி பொறியாளர் ச.கிருஷ்ண பிரசாத், கோயில் மேலாளர் கு.தமிழ்செல்வி, உதவி செயற்பொறியாளர் சீ.அசோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாக அனைவரும் உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்