திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலை அருகேயுள்ள திருப்பராய்த்துறை அனலை கிராமத்தை சேர்ந்தவர் சண்முகம் – சுசிலா தம்பதியினர். சுசிலாவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் தனது மகன் சரவணனுடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பின் ஆட்டோவில் வீடு திரும்பிகொண்டிருந்தபோது பெட்டவாய்த்தலை அருகே சக்தி நகர் பகுதியில் எதிரே வந்த டிப்பர் லாரி ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ, ரோட்டிற்கு அருகேயுள்ள அய்யன் வாய்க்காலில் கவிழ்ந்தது. இரவு நேரம் என்பதால் விபத்து குறித்து யாருக்கும் தெரியவில்லை. பின்னர் நீண்ட நேரம் கழித்து அவ்வழியாக வந்த அக்கம்பக்கத்தினர் ஆட்டோ வாய்க்காலில் கவிழ்ந்துகிடப்பது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் கிரேன் உதவியுடன் ஆட்டோவை மீட்டனர்.இவ்பத்தில் ஆட்டோவில் பயணம் செய்த சுசிலா, சரவணன், ஆட்டோ டிரைவர் ஆகிய மூவரும் உடல் நசுங்கி உயிரிழந்தது தெரிய வந்தது. மூவரது உடலையும் மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்ததோடு இவ்விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
வாழ்க்கையை மாற்றிய இடம் ! மனம் திறந்த ரஜினிகாந்த்

Now Playing
ஸ்ரீரங்கம் ஹனுமந்த வாகனத்தில்நம்பெருமாள் சிறப்புகள்..

Now Playing
🔴 ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (6-ம் திருநாள் காலை ) கற்பக விருக்ஷ வாகனம்

Now Playing
நெல்லையில் பிரபலமான இருட்டுக் கடை அல்வா வாங்கி சாப்பிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

Now Playing
🔴 சுக்ரவார தோப்புஆஸ்தான மண்டபத்திலிருந்து தோளுக்கினியானில் புறப்பட்டு யானை வாகன மண்டபம் சேருதல்

Now Playing
🔴ஸ்ரீரங்கம் தைத்தேர் 2025 (5-ம் நாள் மாலை ) அனுமந்த வாகனத்தில் புறப்பாடு
1
of 986

Comments are closed, but trackbacks and pingbacks are open.