Rock Fort Times
Online News

ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான பிணையப் பத்திரங்கள் ஏலம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு…!

தமிழ்நாடு அரசு, 10 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் 1,000 கோடி ரூபாய்க்கும் மற்றும் 15 ஆண்டுகால பிணையப் பத்திரங்கள் ரூ.1,000 கோடிக்கும் ஏலத்தின் மூலம் விற்பனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்த ஏலம் இந்திய ரிசர்வ் வங்கியால், மும்பையில் உள்ள அதன் மும்பை கோட்டை அலுவலகத்தில் மே 13- தேதி நடத்தப்படும். போட்டி ஏலக்கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள்ளாகவும், போட்டியற்ற ஏலக் கேட்புகள் முற்பகல் 10.30 மணியில் இருந்து 11 மணிக்குள்ளாகவும் இந்திய ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த வங்கி சேவை முறையில் மின்னணு படிவத்தில் மே 13-ந்தேதி சமர்ப்பிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்