ஆடி அமாவாசை தினத்தையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் இன்று நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடி, தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுத்து வழிபாடு நடத்தினர். மாதந்தோறும் அமாவாசை தினம் வந்தாலும், ஆண்டுதோறும் வருகின்ற ஆடி மாத அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை ஆகிய 3 அமாவாசை தினங்கள் பிரசித்தி பெற்றவையாக கருதப்படுகிறது. வழக்கமாக வரும் அமாவாசைகளில் தங்களது முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க தவறியவர்கள், ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை, தை அமாவாசை தினத்தில் தர்ப்பணம் கொடுத்தால் ஆண்டு முழுவதும் அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபட்ட புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை இது போன்ற அமாவாசை வருவது வழக்கம். அதனால் பொதுமக்கள் இன்று பல பேர் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதில் குழப்பத்தில் இருந்தனர். இதனால் அமாவாசையில் களைகட்டும் அம்மா மண்டபம் படித்துறை இன்று வெறிச்சோடி காணப்பட்டது. இருப்பினும் ஒரு சிலர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வந்திருந்தனர். ஆடி அமாவாசையை ஒட்டி ஸ்ரீரங்கம் உதவி கமிஷனர் நிவேதிதா லட்சுமி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பொதுமக்கள் வசதிக்காக அப்பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டிருந்தது.
Comments are closed, but trackbacks and pingbacks are open.