Rock Fort Times
Online News

சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு பாதயாத்திரை வந்த பக்தர்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்தது-பெண்கள் உள்பட 4 பேர் பலி…!

புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை அருகே உள்ள கன்னுக்குடிப்பட்டியை சேர்ந்த பக்தர்கள் சிலர் திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு பாதயாத்திரையாக நடந்து வந்து கொண்டிருந்தனர். அவர்கள் தஞ்சாவூர் மாவட்டம் வளம்பக்குடி பகுதியில் திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த ஒரு வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நடந்து சென்ற பக்தர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் உடல் நசுங்கி முத்துசாமி, மீனா, ராணி, மோகனாம்பாள் ஆகிய 4 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். மேலும் சங்கீதா, லட்சுமி ஆகிய 2 பேர் படுகாயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலனஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்தவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆடிப் பிறப்பை முன்னிட்டு சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு நடந்து சென்ற பக்தர்கள் கூட்டத்துக்குள் வேன் புகுந்த சம்பவம் சக பக்தர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்