திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தச்சன்குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கௌதமன்( வயது 50). இவர் திருச்சியில் உள்ள தனியார் மோட்டார் வாகன காப்பீட்டு நிறுவனத்தில் மேலாளராக பணி புரிந்து வந்தார். இவருக்கு 3 மனைவிகள். முதல் மனைவி பொன்னி. இவருக்கு யுவராஜ்(22) என்ற மகனும், அபினிஸ்ரீ என்ற மகளும் உள்ளனர். அபினி ஸ்ரீக்கு திருமணம் முடிந்து விட்டது. முதல் மனைவி இறந்த நிலையில் மங்கையர் திலகம் என்பவரை கௌதமன் இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். இவருக்கு ரித்திகா என்ற ஒரு பெண் குழந்தை மட்டும் உள்ளது. இரண்டாவது மனைவியும் இறந்துவிட்ட நிலையில்
லால்குடி அருகே பல்லபுரத்தைச் சேர்ந்த பூமதியை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் கௌதமன். இவருக்கு ராதிகா, தான்யா என்ற இரண்டு பெண் குழந்தைகள மற்றும் சூர்யா என்ற ஒரு ஆண் குழந்தை உள்ளனர். அனைவரும் தச்சங்குறிச்சிபுதூர் உத்தமனூர் சாலையில் உள்ள பண்ணை வீட்டில் ஒன்றாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த கௌதமன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன் பிறகு தந்தை பார்த்து வந்த வேலையை யுவராஜ் செய்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று(21-12-2023) அதிகாலை பண்ணை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த யுவராஜ் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த லால்குடி சரக காவல் துணை கண்காணிப்பாளர் அஜய்தங்கம் மற்றும் காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று யுவராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக லால்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், மூன்றாவது மனைவி பூமதியின் அண்ணன் சின்னசாமிக்கும், யுவராஜுக்கும் இடையே சொத்து பிரச்சனை மற்றும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சின்னசாமி மற்றும் அவரது மகன் வல்லரசு ஆகிய இருவரையும் போலீசார் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Error 403 The request cannot be completed because you have exceeded your quota. : quotaExceeded
Comments are closed, but trackbacks and pingbacks are open.