திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் மற்றும் பீனிக்ஸ் கிளப் சார்பில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் மற்றும் ஸ்டீல் ரேக் வழங்கும் விழா…!- திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி டி.பழனி சிறப்பு விருந்தினராக பங்கேற்பு
திருச்சி மத்திய சிறைச்சாலையில் நடைபெறும் சீர்திருத்த பணிகளுக்காக திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் மற்றும் பீனிக்ஸ் கிளப் சார்பில் திருச்சி மத்திய சிறைச்சாலைக்கு ரூ.3 லட்சம் மதிப்புள்ள 1000 புத்தகங்கள் மற்றும் ஸ்டீல் ரேக் வழங்கும் விழா திருச்சி சுப்பிரமணியபுரம் மத்திய சிறை வளாகத்தில் இன்று(28-04-2025) நடைபெற்றது. விழாவில், பிரதம விருந்தினர்களாக திருச்சி சரக சிறைத்துறை டிஐஜி டி.பழனி, மாவட்ட ஆளுநர் ஆர். ராஜா கோவிந்தசாமி, கௌரவ விருந்தினராக ரோட்டரி திருச்சிராப்பள்ளி ஏ.கே.எஸ்.டாக்டர் கே.சீனிவாசன், சிறப்பு விருந்தினராக திருச்சி சிறைத்துறை எஸ்.பி. வி.ருக்மணி பிரியதர்ஷினி மற்றும் திட்டத்தின் தலைவர் பி.ஆர்.முத்துக்குமார், திருச்சி என்.ஆர். ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குனர் ஆர். விஜயாலயன், கிளப் தலைவர் ஜி.பாலசுப்பிரமணியன், செயலாளர் பி. பிரகாஷ் அருள்ராஜ், பொருளாளர் ராஜேஷ் சங்கர் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்பித்தனர்.
Comments are closed.