Rock Fort Times
Online News

திருச்சியில் பரிதாபம்: கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்த நிதி நிறுவன ஊழியர்  பலி ..

திருச்சி பொன்மலை மாஜி ராணுவ காலனியை சேர்ந்தவர் ஜான் கிறிஸ்டி. இவரது மகன் நிக்கோலஸ் (வயது 29). இவர் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். இந்நிலையில் நேற்று ( 16.06.2023 ) இரவு ஆயில் மில்-மாஜி ராணுவ காலனி சாலையில் தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். கணேசாபுரம் ஆர்ச் அருகே அவர் வந்தபோது நிலை தடுமாறி அருகில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் தவறி விழுந்தார். இதில் தலை மற்றும் உடலில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார். இன்று அதிகாலை அவ்வழியே சென்ற பொதுமக்கள் இதனைப் பார்த்து அரியமங்கலம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நிக்கோலஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார், நிக்கோலஸ் மதுபோதையில் கழிவுநீர் வாய்க்காலில் தவறி விழுந்தாரா,?அல்லது வேறு ஏதேனும் காரணமா?என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.+

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்