தமிழக சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், விஜயகாந்தை இறுதியில் தோளில் தூக்கிச் சென்றவர்கள் காவலர்கள்தான். காவல்துறையில் பல வேடங்களில் நடித்து, காவலர்களுடன் நெருக்கமாக இருந்த விஜயகாந்த்க்கு கிடைத்த மரியாதையை, இறுதியில் காவலர்கள்தான் செய்தார்கள். காவல்துறை நன்றாக இருக்க வேண்டும். அவர்கள் நன்றாக இருந்தால்தான் நாடு நன்றாக இருக்கும். கேரளா, ஆந்திராவைப் போல தமிழக காவலர்களுக்கும் சங்கம் வேண்டும் என நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதுகுறித்து அரசு ஆய்வு செய்ய வேண்டும். ஊர்க்காவல் படையினருக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். காவலர்களின் குடும்பங்களுக்கும் மருத்துவக் காப்பீடு வழங்க வேண்டும் என்று பேசினார்.

Comments are closed.