நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வெடித்த சூழலில், இனிவரும் காலங்களில் தேர்வு முறைகேடு நடக்காமல் தடுக்கும் விதமாக சட்டத்திருத்தத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. அதன்படி, பொதுத் தேர்வுகள் முறைகேடு தடுப்புச் சட்டத் திருத்த மசோதா – 2026 இன்று( ஜூலை 27) நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதில், பொதுத்தேர்வில் முறைக்கேட்டில் ஈடுபடும் குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 ஆண்டுகள் சிறை மற்றும் அதிகபட்சமாக ரூ.10 கோடி அபராதம் விதிக்கும் வகையில் இந்த சட்டம் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.