தமிழக முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதிலிருந்து பல்வேறு மாற்றங்களை கொண்டு வருகிறார். முதல் கட்டமாக ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று (மே 22) சில ஐஏஎஸ் அதிகாரிகள்
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
*அந்தவகையில் திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை செயலாளராக சந்தியா வேணுகோபால் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
*சென்னை மாநகராட்சி முன்னாள் ஆணையர் குமரகுருபரன், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை செயலாளராக நியமனம்
* சுற்றுலா, கலாச்சாரத்துறை செயலாளராக ஸ்வர்ணா நியமனம்
* தொழில், முதலீட்டுத்துறை சிறப்புச் செயலாளராக சந்தீப் நந்துரி நியமனம்
* பேரிடர் மேலாண்மை, வருவாய் நிர்வாக ஆணையராக பிரகாஷ் நியமனம்
* ஜவுளித்துறை ஆணையராக சோபனா நியமனம்
* தொழிலாளர் நலத்துறை ஆணையராக ஷில்பா பிரபாகர் சதீஷ் நியமனம்
* நகர திட்ட ஆணையராக கிரண் குர்லா நியமனம்
* மீன்வளத்துறை இயக்குநராக விஜயகார்த்திகேயன் நியமனம்
* சமூக நலத்துறை இயக்குநராக மகேஷ்வரி ரவிக்குமார் நியமனம்
*ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநராக செந்தில் ராஜ் நியமனம்
* போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பாஸ்கர பாண்டியன் நியமனம்
* கருவூலத்துறை இயக்குநராக சாருஸ்ரீ ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
* திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியராக ரவிகுமார் நியமனம்
*சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை இயக்குநராக ஆஷா அஜித் நியமனம்
*நில அளவை மற்றும் குடியமர்வு இயக்குநராக கிறிஸ்துராஜ் நியமனம்
*டிட்கோ முதன்மை செயலாளராக கார்த்திகேயன் நியமனம்
*பசுமை எரிசக்திக்கழக நிர்வாக இயக்குநராக வினய் நியமனம்
*தேசிய சுகாதார இயக்கத்தின் இயக்குநராக அனீஷ் சேகர் நியமனம்
*ஊரக வளர்ச்சி திட்ட தலைமை செயல் அதிகாரியாக சஜீவனா நியமனம்
*சிப்காட் நிர்வாக இயக்குநராக ராமன் நியமனம்
*சேலம் மாநகராட்சி ஆணையராக லலிதியா நீலம் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Comments are closed.