தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக, தனது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே, காங்கிரஸ் கட்சிக்கு 18 சட்டமன்ற தொகுதிகளும், ஒரு மாநிலங்களவை தொகுதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மதிமுகவுக்கு 4 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. உதயசூரியன் சின்னத்தில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி போட்டியிட உள்ளது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலாளர் ஈஸ்வரன் இருவரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

Comments are closed.