பாஜக மாநில செய்தித் தொடர்பாளர் பொறுப்பில் இருந்து ஏஎன்எஸ் பிரசாத் நீக்கப்பட்டுள்ளதாக அக்கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். தமிழக பாஜகவில் மாநில செய்தித் தொடர்பாள ராக பதவி வகித்து வந்தவர் ஏஎன்எஸ் பிரசாத். கட்சியின் தேர்தல் பணிக்குழுவிலும் இடம் பெற்றிருந்தார். இந்த 2 பொறுப்புகளில் இருந்தும் அவர் உடனடியாக விடுவிக்கப்படுவதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். தவெக தலைவர் விஜய், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைய வேண்டும் என்று ஏஎன்எஸ் பிரசாத் அறிக்கை வெளியிட்டிருந்தார். கட்சி தலைமையின் ஒப்புதல் இன்றி, விஜய்யை கூட்டணிக்கு அழைத்ததால் கட்சி மேலிடம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.