மலேசியாவிலிருந்து கைபேசிகளுக்குள் மறைத்து கடத்தி வந்த 476 கிராம் தங்கத்தை திருச்சியில் சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் திருச்சியை வந்தடைந்தது. அதில் வந்த பயணிகளையும் அவர்களது உடைமைகளையும் சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவினர் சோதனை மேற்கொண்டனர். இதில் ஆண் பயணி ஒருவர் கொண்டு வந்த, கைபேசிகள் மற்றும் அவரது பேண்ட் பாக்கெட்டுகள், கடிகாரங்கள் ஆகியவற்றுக்குள் மறைத்து மொத்தம் 476 கிராம் தங்கத்தை கடத்தி வந்தது தெரிய வந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.29.43 லட்சமாகும்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.