திருச்சி, மாநகராட்சிக்குட்பட்ட கொள்ளிடம் ஆளவந்தான் படித்துறை மற்றும் பொது தரைமட்ட நீர் தேக்க தொட்டி நீரேற்று நிலையங்களுக்கு ஸ்ரீரங்கம் துணை மின் நிலையத்திலிருந்து மின் சப்ளை வழங்கப்பட்டு வருகிறது. இந்த துணை மின் நிலையத்தில் நாளை (20.01.2026) மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக மேற்கண்ட நீரேற்று நிலையங்களிலிருந்து குடிநீர் செல்லும் பகுதிகளான மத்திய சிறைச்சாலை, சுந்தராஜ நகர், ஜே.கே.நகர், செம்பட்டு, காஜாமலை, ரெங்கா நகர், சுப்ரமணிய நகர், வீ .என் .நகர், தென்றல் நகர், கவி பாரதி நகர், காமராஜ் நகர், கிராப்பட்டி, அன்பு நகர், எடமலைப்பட்டிபுதூர், பஞ்சப்பூர், அம்மன் நகர், தென்றல் நகர், இபி காலனி, அரியமங்கலம், மலையப்ப நகர், ரயில் நகர், முன்னாள் ராணுவத்தினர் காலனி, மேல கல்கண்டார் கோட்டை, செக்ஸன் ஆபீஸ், நாகம்மை வீதி, நூலகம், பொன்னேரிபுரம், அம்பேத்கர் நகர், விவேகானந்த நகர், எல்.ஐ.சி.காலனி, விஸ்வநாதபுரம், கே. சாத்தனூர், தென்றல் நகர், ஆனந்த நகர், சத்தியவாணி கே.கே.நகர், அம்மா மண்டபம், ஏ. ஐ. பி.இ.ஏ நகர், பாலாஜி அவன்யூ, தேவி பள்ளி பகுதி, மேலூர், பெரியார் நகர், திருவானைக்காவல், தேவதானம், விறகுப்பேட்டை, மகாலட்சுமி நகர், சங்கிலியாண்டபுரம், கல்லுக்குழி, அரியமங்கலம் உக்கடை, தெற்கு உக்கடை, ஜெகநாதபுரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள மேல்நிலை நீர் தேக்கத் தொட்டிகளில் 21.01.2026 ஒரு நாள் குடிநீர் விநியோகம் இருக்காது. 22ம் தேதி முதல் வழக்கம் போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். எனவே,பொது மக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு திருச்சி மாநகராட்சி ஆணையர் மதுபாலன் கேட்டுக் கொண்டுள்ளார்.

Comments are closed.