தர்மபுரி மாவட்டம், தொப்பூர் அருகே நெடுஞ்சாலையில் சேலம் நோக்கி சென்ற லாரி முன்னால் சென்ற பைக், கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து படுகாயம் அடைந்த நான்கு பேரையும் மீட்டு தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உயிரிழந்த நான்கு பேரின் உடல்களும் அதே மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விவரம் உடனடியாக தெரியவில்லை. இதுதொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.