Rock Fort Times
Online News

திருச்சி சிட்டி பகுதியில் நாளை (செப்.25) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிப்பு…!

திருச்சி நீதிமன்ற வளாகம் துணை மின் நிலையத்தில் நாளை (25-09-2025) பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் காரணமாக நாளை காலை 9-45 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட புது ரெட்டித்தெரு, பொன்விழா நகர், கிருஷ்ணன் கோயில் தெரு, பங்காளி தெரு, மத்திய பேருந்து நிலையம், கண்டிதெரு, பாரதிதாசன் சாலை, ராயல் சாலை, அலெக்ஸ் சாண்டிரியா சாலை, எஸ்பிஐ காலனி, பென்வெல்ஸ் சாலை, வார்னஸ் சாலை, அண்ணாநகர், குட்பிசா நகர், உழவர் சந்தை, ஜெனரல் பஜார், கீழசத்திரம் சாலை, பட்டாபிராமன் சாலை, கே.எம்.சி மருத்துவமனை பகுதி, புத்தூர், அருணா தியேட்டர், கணபதிபுரம், தாலுக்கா அலுவலக சாலை, வில்லியம்ஸ் சாலை, சோனா- மீனா தியேட்டர், நீதிமன்ற பகுதி, அரசு பொது மருத்துவமனை பகுதி, பீமநகர், செடல் மாரியம்மன் கோவில், கூனி பஜார், ரொனால்ட்ஸ் சாலை, லாசன்ஸ் சாலை, வண்ணாரப்பேட்டை, பாரதிதாசன் காலனி, ஈவெரா சாலை, வயலூர் சாலை, பாரதி நகர் ஆகிய இடங்களில் மின் விநியோகம் இருக்காது என்று
திருச்சி தென்னூர் மின்வாரிய செயற்பொறியாளர் கே.ஏ. முத்துராமன் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்