26-ம் ஆண்டு நினைவு தினம்: அன்பில் பொய்யாமொழி உருவப் படத்திற்கு அமைச்சர் அன்பில் மகேஷ் மாலை அணிவித்து மரியாதை…!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், முன்னாள் அமைச்சருமான அன்பில் தர்மலிங்கம் புதல்வரும், திமுக இளைஞர் அணி தொடங்கப்பட்ட நாளில் இருந்து அதன் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்தவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் மாநில இளைஞரணி துணைச் செயலாளருமான அன்பில் பொய்யாமொழி 26ம் ஆண்டு நினைவு தினம் இன்று (28-08-2025) அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அன்பில் பொய்யாமொழி திருவுருவப்படத்திற்கு தெற்கு மாவட்ட கழக செயலாளரும், அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்,
கிழக்கு மாநகர கழகச் செயலாளர் மு.மதிவாணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், கே.என்.சேகரன், சபியுல்லா, பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தலைமை செயற்குழு – பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய, பகுதி, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
Comments are closed.