திருச்சி, சோமரசம்பேட்டை, நாச்சி குறிச்சி பகுதியைச் சேர்ந்தவர் கார்த்திக் (வயது 36). இவரது மனைவி அர்ச்சனா (34)கணவன், மனைவி இருவரும் மொபட்டில் திருச்சி பழைய பால்பண்ணையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனை சர்வீஸ் ரோடு வழியாக சென்றனர். அப்போது அவ்வழியாக வந்து கொண்டிருந்த லாரி எதிர்பாராத விதமாக பைக் மீது மோதியது. இதில் மொபட்டில் பயணம் செய்த கணவன்- மனைவி இரண்டு பேரும் தூக்கி வீசப்பட்டனர் .விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த அர்ச்சனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து லாரி ஓட்டுனரான விழுப்புரம் வளவனூர் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் ( 33 )என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்
Comments are closed.