Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம்- * கோரிக்கை மனுக்களை பெற்றார் மேயர் மு.அன்பழகன்…!

திருச்சி மாநகராட்சி மேயர் அலுவலக கூட்ட அரங்கில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று (ஜூன் 23) நடைபெற்றது. கூட்டத்தில் மாநகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை, மேயர் மு .அன்பழகனிடம் வழங்கினர். மனுக்களை பெற்றுக் கொண்ட அவர், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாநகராட்சி துணை மேயர் ஜி.திவ்யா தனக்கோடி, ஆணையர் வெ.சரவணன், நகரப் பொறியாளர் பி.சிவபாதம், துணை ஆணையர் பாலு,
மண்டல தலைவர்கள் துர்காதேவி , விஜயலட்சுமி கண்ணன் மற்றும் நகர்நல அலுவலர், செயற் பொறியாளர்கள், உதவி ஆணையர்கள் மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் கலந்து கொண்டனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்